தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சில காமெடி நடிகர்கள் ஆட்சி செய்து வருவார்கள் . அப்படி 80 , 90 களில் தமிழ் சினிமாவையே தன்னுடைய காமெடியால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் கவுண்டமணி . அதுவும் ஒரு கட்டத்தில் கவுண்டமணி – செந்தில் கூட்டணி சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி, கமல் ,விஜயகாந்த் ,
சத்யராஜ், சரத்குமார் ,பிரபு ,விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார் நடிகர் கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 84 வது வயதில் மீண்டும் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார் நடிகர் கவுண்டமணி.அந்த வகையில் ,
இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி வரும் “ஒத்த ஓட்டு முத்தையா ” என்ற படத்தில் நடிக்கிறாராம் . குறிப்பாக ரஜினி , கமலே வயதாகி விட்டதால் ஹீரோ சப்ஜெக்ட் கதையிலிருந்து விலகி வரும் நிலையில் கவுண்டமணி 84 வயதிலும் ஹீரோவாக களம் இறங்கியுள்ளது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது…