தமிழ் சினிமா உலகில் கடந்த 2008 ஆம் ஆண்டு கருணாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திண்டுக்கல் சாரதி . இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் மலையாள நடிகையான கார்த்திகா மேத்யூ . இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் இவர் தமிழில் நடிகையாக அறிமுகமானது கடந்த 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ,
வெளியான காசி என்ற படத்தின் மூலம் தான். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என் மன வானில் ,நம் நாடு ,நாளை நமதே ,ஆறு மனமே, பாலைவன சோலை ,மகிழ்ச்சி, புலன் விசாரணை 2 போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை கார்த்திகா மேத்யூ .
மேலும் இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் மாறி மாறி நடித்துக்கொண்டு வந்தார் . இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு மெரின் மேத்யூ என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர் . மேலும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதையே,
நிறுத்திவிட்டார் நடிகை கார்த்திகா . இப்படி இருக்கும் நிலையில் நடிகை கார்த்திகாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் திண்டுக்கல் சாரதி படத்தில் நடித்த நடிகையா இது .? ஆளே அடையாளம் தெரியலையே என்று கூறி வருகின்றனர்…