தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சாக்ஷி அகர்வால். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து திருட்டு விசிடி ,காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 ,நான் கடவுள் இல்லை, பஹீரா போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார் .
மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் . அதோடு தற்போது ஏழு படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ,
ஹீரோயின் வாய்ப்பு தரேன்னு சொல்லி அட்லீ என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார் சாக்ஷி அகர்வால். அந்த வகையில் அவர் கூறியதாவது , நான் பெங்களூரில் இருந்த போது தான் ராஜா ராணி பட வாய்ப்பு வந்தது . அப்போது இந்தப் படத்தில் ஆர்யா தான் ஹீரோ ,
நீங்கள் இரண்டாம் ஹீரோயின் என்று சொன்னார்கள் ,அந்த நேரத்தில் சினிமாவைப் பற்றி எல்லாம் எனக்கு அவ்வளவாக தெரியாது . பின்னர் அவர்கள் சொல்லியதும் இரண்டு நாட்கள் ஷூட்டிங் சென்றேன். அதன் பிறகு என்னை கூப்பிடவே இல்லை . கடைசியில் பார்த்தால் ,
படம் ரிலீஸ் ஆகிவிட்டது . ஆனால் அந்தப் படத்தில் என்னை வேறு மாதிரி காட்டி இருந்தார்கள். மேலும் நான் இதைப்பற்றி அப்போதே இயக்குனர் அட்லீயிடம் பேசி இருக்கணும், பேசாமல் விட்டது தான் நான் செய்த பெரிய தப்பு என்று கூறியிருந்தார் நடிகை சாக்ஷி அகர்வால்…