கடந்த பத்தாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் ,விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ,சுனில் ,யோகி பாபு ,மிர்னா மேனன், வி டிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அதோடு சிறப்பு கதாபாத்திரங்களில் மோகன்லால் ,சிவராஜ்குமார் ,
ஜாக்கிசரப் , தமன்னா போன்ற பிரபலங்களும் நடித்திருந்தனர் . இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. பல வருடங்களாக ஒரு நல்ல வெற்றி படத்தை கொடுக்காமல் தடுமாறி வந்த சூப்பர் ஸ்டாருக்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய,
வரவேற்பை பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அடுத்தடுத்த சூப்பர் ஸ்டாருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது . அதுமட்டுமில்லாமல் வசூலிலும் பிரம்மாண்ட சாதனை படைத்தது ஜெயிலர் திரைப்படம் . மேலும் இந்த திரைப்படம் இதற்கு முன்பு வசூல் சாதனை படைத்த அத்தனை படங்களையும் ,
ஓரங்கட்டி உள்ளது. அப்படி இந்த படம் வெளியாகி 14 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 550 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இனிமேல் ஜெயிலரின் வசூல் ஓய்ந்துவிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது .காரணம் இன்று ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே ,
ஆதி ஹன்சிகா நடிப்பில் வெளியான பார்ட்னர், புதுமுகமான ராம் அருண் நடித்துள்ள ஹர்காரா போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் ஜெயிலரின் வசூல் பாதிக்கும் என்று கூறப்படுகிறது…