கடந்த மாதம் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தது தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது . மேலும் இவர் இறந்தபோது ஒரு நல்ல நடிகரையும் , நல்ல தலைவரை இழந்து விட்டோம் என்று ரசிகர்களும், பிரபலங்களும் கதறி கதறி அழுதனர். குறிப்பாக கேப்டன் இறந்தாலும் அவர் புகழ் மறையாது என்று தான் சொல்ல வேண்டும் .
இப்படி இருக்கும் நிலையில் கேப்டனின் கடைசி நிமிடங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் பிரேமலதா . அதில் அவர் கூறியதாவது, டிசம்பர் 28ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கேப்டனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது , அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,
இனிமேல் கஷ்டம் தான், எல்லோருக்கும் சொல்லி விடுங்கள் என்று கூறிவிட்டனர். இதன்பிறகு 6.10 மணி அளவில் கேப்டன் இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார் பிரேமலதா ….