May 9, 2024

அதிகாலை 4 மணிக்கே இப்படி சொல்லிட்டாங்க ..!! கேப்டனின் கடைசி நிமிடங்களை பகிர்ந்த பிரேமலதா ..!!

கடந்த மாதம் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தது தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது . மேலும் இவர் இறந்தபோது ஒரு நல்ல நடிகரையும் , நல்ல தலைவரை இழந்து விட்டோம் என்று ரசிகர்களும்,  பிரபலங்களும் கதறி கதறி அழுதனர்.  குறிப்பாக கேப்டன் இறந்தாலும் அவர் புகழ் மறையாது என்று தான் சொல்ல வேண்டும் .

இப்படி இருக்கும் நிலையில் கேப்டனின் கடைசி நிமிடங்களை சமீபத்திய   பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் பிரேமலதா . அதில் அவர் கூறியதாவது,  டிசம்பர் 28ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கேப்டனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது , அவரை பரிசோதித்த  மருத்துவர்கள்,

இனிமேல் கஷ்டம் தான்,  எல்லோருக்கும் சொல்லி விடுங்கள் என்று கூறிவிட்டனர்.  இதன்பிறகு 6.10 மணி அளவில் கேப்டன் இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார் பிரேமலதா ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *