80 , 90களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நதியா . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நதியா கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பூக்களை பறிக்காதீர்கள் ,மந்திரப் புன்னகை, நிலவே மலரே,
சின்னத்தம்பி பெரியதம்பி ,அன்புள்ள அப்பா ,ராஜாதி ராஜா , ராஜகுமாரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை நதியா . பின்னர் திருமணமான பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்ட நதியா பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி தன்னுடைய,
வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை நதியா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் கலக்கிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் நடிகை நதியாவுக்கு ,
56 வயது என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள் . காரணம் இந்த வயதிலும் அவ்வளவு இளமையாக இருக்கிறார் நடிகை நதியா. இப்படி இருக்கும் நிலையில் நதியா நடிப்பில் வெளியான பூவே பூச்சூடவா திரைப்படம் வெளியாகி 38 வருடங்கள் ஆகிவிட்டது . அந்தப் படத்தில் நதியாவுடன் ,
இணைந்து மூன்று சிறுவர்கள் நடித்திருந்தனர். அதில் இரண்டு சிறுவர்களை மீண்டும் சந்தித்து இருக்கிறார் நடிகை நதியா . ஆனால் அந்த சிறுவர்கள் நதியாவை விட வயதானவர்கள் போல உள்ளனர் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நதியாவுக்கு வயசே ஆகாது போல என்று கூறி வருகின்றனர்…