90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா . கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூரியன் ,உழைப்பாளி ,வீரா ,அசுரன் ,ஆயுத பூஜை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ,
தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் நடிகை ரோஜா . மேலும் நடிகை ரோஜா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே,
இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரோஜா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். திருமணமான பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகை ரோஜா ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில்,
களம் இறங்கினார் . தற்போது ஆந்திராவில் அமைச்சராக இருந்து வருகிறார் நடிகை ரோஜா . இப்படி இருக்கும் நிலையில் அந்த நடிகருக்கு அக்காவாக நடிக்க வேண்டும் இதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆசை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை ரோஜா .
அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு தான் . இவருக்கு அக்கா அல்லது அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார் நடிகை ரோஜா…