குஷ்பூ ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தனது திரைப்படம் காலகட்டத்திலேயே பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்துக்கொண்டார் நடிகை குஷ்பூ . மேலும் இந்த தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் கலந்து கொண்டு வந்தார்.
இதனிடையே சுந்தர்சியை திருமணம் செய்துகொண்ட குஷ்பூவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . மேலும் திருமணத்திற்கு பிறகு இந்து பெண்ணாகவே மாறிவிட்டார் நடிகை குஷ்பூ . இப்படி இருக்கும் நிலையில் கேரளா மாநிலத்தில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் நாரி பூஜை,
நடந்திருக்கிறது. அதற்காக நடிகை குஷ்பூவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாம் . குறிப்பாக வருடத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த பூஜையில் கலந்து கொள்ள அனுமதி கிடைக்குமாம் . இந்த முறை குஷ்பூவுக்கு கிடைத்துள்ள தான் இதை நான் ஒரு அதிர்ஷ்டமாகவே உணர்கிறேன்.
என்றும் அந்த தெய்வமே என்னை தேர்ந்தெடுத்ததாக நம்புகிறேன் என்றும் உருக்கமான பதிவை போட்டு அந்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் நடிகை குஷ்பூ . அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…