April 28, 2024

உலகத்திலேயே அதை நான் மட்டும் தான் பண்ணியிருக்கிறேன் ..!! 80 வயதாகியும் இளையராஜாவுக்கு குறையாத கர்வம் ..!!

இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும் இசை ஞானி இளையராஜாவின் இசை நின்று பேசும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.  அந்த வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் . இன்னும் சொல்லப்போனால் அப்போது,

ஹீரோ , ஹீரோயின் கால்சீட்டை விட இளையராஜாவின் கால் சீட்டுக்கு தான் பல இயக்குனர்களும் , தயாரிப்பாளர்களும் காத்துக்கொண்டிருந்தனர்.  மேலும் ஐந்து தேசிய விருது, ஆறு தமிழ்நாடு அரசு விருது ,கேரளா அரசு விருது, நந்தி அரசு விருது என்று இதுவரை பல விருதுகளை ,

குவித்து இருக்கிறார் இளையராஜா.  என்னதான் தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டி போட்டாலும் தன்னுடைய ஆணவத்தால் அவ்வப்போது தன்னுடைய பெயரையும் கெடுத்துக் கொண்டு வருகிறார் இளையராஜா . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ,

இளையராஜா , நான் கர்வத்திலிருந்து இப்போது வெளியே வந்து விட்டேன்.   மேலும் மூன்று நாட்களில்,  மூன்று படங்களுக்கு பின்னணி இசை அமைத்த ஒரே இசையமைப்பாளர் உலகத்திலேயே அது நான் மட்டும்தான் . ஆனால் இப்போதுள்ள பல இசையமைப்பாளர்கள் ஆறு மாதங்கள்,

எடுத்துக்கொள்கிறார்கள்.  ஒரு சிலர் ஒரு வருடமே எடுத்துக் கொள்கிறார்கள் . ஏனென்றால் அவர்களுக்கு இசை வரவில்லை என்பதுதான் காரணம் என்று கூறியிருந்தார் இளையராஜா . இதைப் பார்த்த ரசிகர்கள் கர்வத்திலிருந்து வெளியே வந்து விட்டேன் என்பதை கர்வமாக சொல்கிறார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *