May 1, 2024

பொன்னியின் செல்வன் எல்லாம் ஒரு படமா ..?? 500 கோடி போட்டு எடுத்த படத்தை ..!! ஒரே வார்த்தையில் டேமேஜ் செய்த இளையராஜா ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த வருடம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.  அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படம் எடுப்பதற்கு எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை பல பிரபலங்கள் போராடினார்கள் . ஆனால் கடைசியில்அந்த வாய்ப்பு இயக்குனர் மணிரத்னத்திற்கு தான் கிடைத்தது.

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா ,ஜெயராம், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு ,ஐஸ்வர்யா லட்சுமி ,பிரகாஷ்ராஜ் ,சோபிதா  போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ,

வசூலில் சக்கை போடு போட்டது . ஆனால் இரண்டாம் பாகம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜாவிடம் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னின் செல்வன் படத்தை பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த இளையராஜா , பொன்னியின் செல்வன் நாவலை நான் பலமுறை படித்திருக்கிறேன்.  அந்தக் கதையிலேயே ரொம்ப ஊறிப் போனதால் பொன்னின் செல்வன் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் என்னை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்று வெளிப்படையாக,

கூறியிருந்தார் இளையராஜா.  இதைப் பார்த்த ரசிகர்கள் இவர் நல்லா இருக்கிற படத்தையே நல்லா இல்லைன்னு தான் சொல்லுவார் பொன்னின் செல்வன் படத்தை பற்றி சொல்லவா வேண்டும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *