90 களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை குஷ்பூ . 1988 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை குஷ்பூ . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வருஷம் 16 ,கிழக்கு வாசல் ,மைக்கேல் மதன காமராஜன் ,சின்னத்தம்பி ,ரிக்சா மாமா ,சிங்காரவேலன் ,அண்ணாமலை ,
நாட்டாமை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை குஷ்பூ . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பூ.
திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குறிப்பாக திருமணத்துக்கு பிறகும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்துக்கொண்டு வந்த நடிகை குஷ்பூ தற்போது அரசியலிலும் களம் இறங்கியுள்ளார் . இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும்,
காதலிக்க தொடங்கி இன்றோடு 29 வருடங்கள் ஆகிவிட்டதாம் . அதை கொண்டாடும் வகையில் தன்னுடைய கணவருடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …