ஹன்சிகா மோத்வானி ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வந்த ஹன்சிகா கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுடூரு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஹன்சிகா.
இதன் பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம் ,ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு ,சிங்கம் 2 ,மான் கராத்தே ,அரண்மனை, ரோமியோ ஜூலியட் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
குறிப்பாக இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து நடித்து வந்த ஹன்சிகா 31 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வருடம்,
தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்படியொரு நிலையில் என்னுடைய கணவர் வேற அறையில் தூங்குவதை தான் விரும்புவேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ஹன்சிகா . அந்த வகையில் ஹன்சிகாவுக்கு ஹேண்ட் பேக் என்றால்,
அவ்வளவு பிரியமாம். அப்படி அவருடைய படுக்கை முழுவதும் ஹேண்ட் பேக்குகளாக தான் இருக்குமாம். அதனால் அவருடைய கணவரை தன் படுக்கையில் இல்லாமல் வேறு அறையில் தான் தூங்க சொல்வாராம். இந்த விஷயத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஹன்சிகாவே கூறியிருந்தார்…