April 27, 2024

காரிலேயே குடும்பம் நடத்திய நடிகர் சுந்தர்ராஜனின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும் , நடிகராகவும் கலக்கிக்கொண்டு வந்தவர் சுந்தர்ராஜன் . கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர்ராஜன் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த சுந்தர்ராஜன் தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள் ,அம்மன் கோவில் கிழக்காலே ,மெல்ல திறந்தது கதவு,

ராஜாதி ராஜா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் இயக்குவதை நிறுத்தி விட்டு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார் சுந்தர்ராஜன் . அந்த வகையில் தமிழ் படங்களில் ,

குணச்சித்திர வேடங்களிலும்,  காமெடி வேடங்களிலும் கலக்கிக்கொண்டு வந்த சுந்தர்ராஜன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்துக்கொண்டு வருகிறார் . இதனிடையே திருமணமான சுந்தர்ராஜனுக்கு,

மூன்று மகன்கள் உள்ளனர் . அதில் ஒரு மகன் விபத்தில்  இறந்து விட்டார் . அது மட்டுமல்லாமல் சுந்தர்ராஜன் அவர்களின் மனைவி ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் , இவரும் இயக்குனர் என்பதால் இருவரும் பிசியாகவே இருப்பார்களாம்.  அப்போது காரில் தான் இவர்கள் இருவரும் ,

சந்தித்துக் கொள்வார்களாம். அப்போதுதான் குடும்பப் பிரச்சனைகளையும் , அடுத்து என்ன செய்வது என்பதையும் பேசுவார்களாம் . இந்நிலையில் நடிகர் சுந்தர்ராஜனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *