April 29, 2024

ஊரே கூடி மாரிமுத்துவை வழியனுப்பி வைத்தது ..!! கல்நெஞ்சக்காரரையும் கரைய வைக்கும் புகைப்படங்கள் ..!!

இப்போது வரை மாரிமுத்து என்ற உன்னதமான கலைஞர் இறந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . அப்படி சினிமா மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்த மாரிமுத்து ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் .  பின்னர் இயக்குனர் அவதாரம் எடுத்த மாரிமுத்து ஒரு கட்டத்தில் முழுநேர நடிகராகவே மாறினார்.  இப்படி வெள்ளித்திரையைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் கலக்கி கொண்டு வந்த,

மாரிமுத்து நேற்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்தது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந் நிலையில் நேற்று இறந்த மாரிமுத்துவை அவருடைய சொந்த ஊரான பசுமலைதேரியில்  உள்ள அவருடைய இல்லத்தில்  பொதுமக்களின் அஞ்சலிக்காக மாரிமுத்துவின்,

உடல் வைக்கப்பட்டுள்ளது.  நடிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பல பேர் வந்து மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் . இன்னும் சொல்லப்போனால் அந்த ஊரில் உள்ள அனைவருமே மாரிமுத்துவின் வீட்டில் தான் இருந்திருக்கின்றனர் . பின்னர்,

இறுதி சடங்குகள் முடிந்து அவருடைய உடலை தூக்கிக்கொண்டு போகும்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த ஊரே சேர்ந்து மாரிமுத்துவை வழியனுப்பி வைத்துள்ளனர் . அப்படி பார்ப்பவரை கண்கலங்க வைக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *