April 27, 2024

ரஜினி மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு ..!! சூப்பர் ஸ்டாரின் செயலால் கொந்தளிக்கும் ரோஜா ..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா ..??

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடமாக அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ரசிகர்களை கடைசியில் ஏமாற்றி விட்டார்.  அப்படி அரசியலுக்கு வராததால் மற்ற அரசியல் பிரபலங்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்கள் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ரஜினி செய்த செயலால்,

கொந்தளித்துள்ளார் நடிகை ரோஜா . அந்த வகையில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சராக இருந்து வந்தவர் தான்  சந்திரபாபு நாயுடு.  அப்படி இவர் முதல்வராக இருக்கும்போது 370 கோடியை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்து இருக்கிறார்.  இந்த குற்றத்திற்காக கடந்த ஒன்பதாம் தேதி,

சந்திரபாபு நாயுடுவை  கைது செய்தார்கள். இதனால் ஆந்திர மாநிலமே கலவரமானது .  இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவின் மகனை தொடர்பு கொண்டு , என்னுடைய நண்பர் எந்தத் தவறையும் செய்திருக்க மாட்டார்,  எனக்கு நம்பிக்கை,

இருக்கிறது , அவர் விரைவில் வெளியே வந்து விடுவர் என்று ஆறுதல் கூறினாராம் . இதை கவனித்த நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா கூறியதாவது,  ரஜினி ஒரு புத்திசாலின்னு எனக்கு தெரியும்.  ஆனால் அவர் திருடர்களுக்கு ஏன் ஆதரவு அளிக்கிறார் .

அவர் மீது இருந்த கொஞ்ச நெஞ்ச மரியாதையும் போய்விட்டது . மக்கள் பணத்தை கொள்ளையடித்த இவருக்கு ரஜினிகாந்த் ஆதரவளிப்பது வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தார் நடிகை ரோஜா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *