தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் அஜித்குமார். அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜித் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . குறிப்பாக தமிழ் சினிமாவிலேயே தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருபவர் நடிகர் அஜித் மட்டும் தான். இதனிடையே அமர்க்களம் படத்தில் நடிக்கும் போதே,
தன்னுடன் நடித்த நடிகை ஷாலினி மீது காதல் வயப்பட்டார் நடிகர் அஜித். பின்னர் கடந்த 2000-ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் அஜித். திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர். இதில் அஜித்தின் மகனான,
ஆத்விக் எட்டு வயதிலேயே கால்பந்து விளையாட்டுப் போட்டியில் அசத்தி வருகிறார் . மேலும் தன்னுடைய மகனின் திறமையை புரிந்து கொண்ட அஜித்தும் ஷாலினியும் தற்போது மகனை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர் . இதனால் வரும் காலக்கட்டத்தில் ,
அஜித்தின் மகன் சினிமாவிற்கு வராமல் ஒரு நல்ல கால்பந்தாட்ட வீரராக வருவார் என்று பலரும் கூறிவருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…