தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் நடிகர் அசோக் செல்வன் . சூது கவ்வும் என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய அசோக் செல்வன் பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பீட்சா 2 ,தெகிடி, சவாலே சமாளி ,144, கூட்டத்தில் ஒருத்தன், சில சமயங்களில், மன்மத லீலை, ஹாஸ்டல் ,போர் தொழில் போன்ற,
பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்ததால் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அது மட்டுமல்லாமல் இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து வந்தனர் . இதனிடையே,
கடந்த 13 ஆம் தேதி நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார் அசோக் செல்வன் . ஆனால் இவர் திருமணம் ஆனதிலிருந்தே மோசமான விமர்சனங்களையே சந்தித்து வருகிறார் . அந்த வகையில் அசோக் செல்வன் இருக்கும் அழகுக்கு இவர் எல்லாம் ஈடாகுவாரா .?
என்று வாய்க்கு வந்தபடி அவருடைய ரசிகைகள் கூறி வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக பேசியவர்களின் வாயை அடைத்துள்ளார் நடிகர் அசோக் செல்வன். அந்த வகையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ,
கீர்த்தி பாண்டியனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு “உலகின் மிக அழகான பெண்ணுடன்” என்று பதிவு போட்டு உள்ளார் அசோக் செல்வன் . இதைப் பார்த்த ரசிகர்கள் ஓவராக கதறிய ரசிகைகளுக்கு சரியான செருப்படி என்று கூறி வருகின்றனர்…
View this post on Instagram