April 29, 2024

ஒரே ஒரு புகைப்படம் தான் ..!! ஊர் வாயையே அடைத்த அசோக் செல்வன்..!! அப்படி அதில் என்ன இருக்கிறது ..?? வைரலாகும் தகவல் உள்ளே ..!!

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் நடிகர் அசோக் செல்வன் . சூது கவ்வும் என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய அசோக் செல்வன் பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பீட்சா 2 ,தெகிடி, சவாலே சமாளி ,144, கூட்டத்தில் ஒருத்தன், சில சமயங்களில், மன்மத லீலை, ஹாஸ்டல் ,போர் தொழில் போன்ற,

பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்ததால் ரசிகர்கள் இவரை  தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.  அது மட்டுமல்லாமல் இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து வந்தனர் . இதனிடையே,

கடந்த 13 ஆம் தேதி நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார் அசோக் செல்வன் . ஆனால் இவர் திருமணம் ஆனதிலிருந்தே மோசமான விமர்சனங்களையே சந்தித்து வருகிறார் . அந்த வகையில் அசோக் செல்வன் இருக்கும் அழகுக்கு இவர் எல்லாம் ஈடாகுவாரா .?

என்று வாய்க்கு வந்தபடி அவருடைய ரசிகைகள் கூறி வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக பேசியவர்களின் வாயை அடைத்துள்ளார் நடிகர் அசோக் செல்வன்.  அந்த வகையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ,

கீர்த்தி பாண்டியனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு “உலகின் மிக அழகான பெண்ணுடன்” என்று பதிவு போட்டு உள்ளார் அசோக் செல்வன் . இதைப் பார்த்த ரசிகர்கள் ஓவராக கதறிய ரசிகைகளுக்கு சரியான செருப்படி என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Ashok Selvan (@ashokselvan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *