May 8, 2024

என்ன பார்த்தா ஆன்ட்டி மாதிரி தெரியுதா ..?? உண்மையான வயசு இது தான் ..!! ரசிகர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த ” பருத்திவீரன் ” முத்தழகு ..!!

பிரியாமணி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தான் . இந்த படத்தில் இவர் நடித்திருந்த,

முத்தழகு கதாபாத்திரத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை ,தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பிரியாமணி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி .  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்,

பிரியாமணி அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவார் . அப்படி சமீப காலமாக இவரை ரசிகர்கள் பாடி ஷேமிங் செய்கிறார்களாம்.  இன்னும் சில பேர் ஆன்ட்டி என்றும் இவரை சொல்கிறார்களாம்.  இதை பார்த்த பிரியாமணி,  நான் இன்று சினிமாவில்,

நடிப்பதற்கு முக்கிய காரணமே என்னுடைய கணவர் தான்.  எனக்கு இப்போது 39 வயது தான் ஆகிறது . ஆனால் இப்போதும் நான் பிட்டாக தான் இருக்கிறேன் . அதனால் யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என்று சரியான பதிலடி கொடுத்திருந்தார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *