சினிமாவில் இருக்கும் ஒரு சில நடிகைகள் நடிப்பை தாண்டி சைடு பிசினஸில் கல்லா கட்டி வருகின்றனர் . அந்த வகையில் தற்போது பால்காரியாக மாறியிருக்கிறார் பிரபல அஜித் பட நடிகை ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை சைத்ரா ரெட்டி தான் . கன்னட சீரியல் மூலம் அறிமுகமான சைத்ரா ரெட்டி தமிழில் வெளியான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.
பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து யாரடி நீ மோகினி, கயல் போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . குறிப்பாக கயல் சீரியல் இவரை தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு,
வந்த சைத்ரா ரெட்டி வெள்ளித்திரையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை சைத்ரா ரெட்டி. மேலும் சீரியல் மூலம் பல லட்சம் சம்பாதித்து வரும் சைத்ரா ரெட்டி ,
தற்போது புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் . அந்த வகையில் இவருக்கு ஏற்கனவே 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் . அதை தற்போது தொடங்கி விட்டாராம் தற்போது 50 மாடுகளுடன் கூடிய மாட்டுப் பண்ணை ஒன்றை தொடங்கியுள்ள சைத்ரா ரெட்டி.
இந்த சந்தோஷமான செய்தியை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு பால் கறக்கும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார் நடிகை சைத்ரா ரெட்டி . இதை பார்த்த ரசிகர்கள் நடிகை சைத்ரா ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…
View this post on Instagram