அசோக் செல்வன் ஓர் வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் அசோக் செல்வன். பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து வெளியான பீட்சா 2 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அசோக் செல்வன் தொடர்ந்து தெகிடி ,சவாலே சமாளி, 144 ,கூட்டத்தில் ஒருத்தன்,
ஓ மை கடவுளே , மன்மத லீலை , ஹாஸ்டல் , நித்தம் ஒரு வானம் என்று தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் ,
சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதை அடுத்து தற்போது இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். இதனிடையே ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான,
நடிகை கீர்த்தி பாண்டியன் மீது காதல் வயப்பட்டார் நடிகர் அசோக் செல்வன் . பின்னர் கடந்த மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . இப்படி இருக்கும் நிலையில் திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் தன்னுடைய கெட்டப்பையே ,
மாற்றி இருக்கிறார் நடிகர் அசோக்செல்வன் . இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் அசோக் செல்வனா இது ..?? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்…