April 25, 2024

இனிமேல் செருப்பே போட்ட மாட்டேன் ..!! வித்தியாசமான காரணத்தை சொல்லிய விஜய் ஆண்டனி ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் கலக்கிக்கொண்டு வருபவர் விஜய் ஆண்டனி கடந்த 2௦௦5 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நான் அவன் இல்லை ,காதலில் விழுந்தேன் ,நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன்,

அங்காடித்தெரு, வேலாயுதம் , நான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தார் விஜய் ஆண்டனி . பின்னர் நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் ஆண்டனி . இதைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில்,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் விஜய் ஆண்டனி ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதனாலேயே தமிழ் மக்கள் இவர் மீது ஒரு தனி மரியாதை வைத்திருக்கின்றனர் .

இந்நிலையில் சமீப காலமாக விஜய் ஆண்டனி எங்கு சென்றாலும் செருப்பு அணியாமல் தான் செல்கிறார்.  இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார் . அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி , அதற்கு எந்த காரணமும் கிடையாது . திடீரென என்னுடைய மனதில் பட்டது,

இனிமேல் செருப்பே அணிய வேண்டாம் என்று,  அதுவும் நல்லதுக்கு தான் என்று என்னுடைய மனதில் தோன்றியது . அதனால் தான் நான் செருப்பணியாமல் வருகிறேன் என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *