ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்தவர் மறைந்த நடிகர் முரளி . இவருடைய மூத்த மகன் தான் அதர்வா . கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் அதர்வா . இந்த படத்தை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி ,இமைக்கா நொடிகள் , பட்டத்து அரசன் போன்ற ,
பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் அதர்வா . இப்படி பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக் கவில்லை . அது மட்டுமல்லாமல் சமீப காலமாக சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு செல்லாமல் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறார் அதர்வா .
அதோடு அக்கா வயது நடிகை உடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தாராம் நடிகர் அதர்வா . அவர் வேறு யாருமில்லை நடிகை பிரியா ஆனந்த் தான் . இரும்பு குதிரை படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கும் இருவருக்கும் இடையே ,
இரண்டு வயது வித்தியாசம் . அப்படி இருந்தும் கூட மூன்று வருடங்களாக இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து வந்துள்ளனர் . ஆனால் கடைசி நேரத்தில் பிரியா ஆனந்தின் உறவை முறித்துக் கொண்டாராம் நடிகர் அதர்வா . இதனால் சரியான மன உளைச்சலுக்கு ஆளான ,
நடிகை பிரியா ஆனந்த் பல வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார் . இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் நடித்து விஸ்வரூபம் எடுக்க இருக்கிறாராம் நடிகை பிரியா ஆனந்த்…