தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஷங்கர் . பிரம்மாண்ட இயக்குனர் என்று கொண்டாடப்படும் இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகனான அதிதி ஷங்கர் கடந்த வருடம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே ,
இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடித்திருந்தார் நடிகை அதிதி ஷங்கர் . இதைத்தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறாராம் நடிகை அதிதி ஷங்கர் . இருந்தாலும் சமீபகாலமாக இவர் மீது,
பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது . அது என்னவென்றால் தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு பாடலையாவது நான் பாடி விடுவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறாராம் நடிகை அதிதி ஷங்கர் . இவர் முன்னணி இயக்குனரின் மகள் என்பதால் இவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்து விடுக்கிறார்கள் . இதனால் பல பாடகிகளின்,
வாய்ப்பு பறிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ஷங்கர் கோடி கோடியாய் கொட்டி தன்னுடைய மகளை டாக்டருக்கு படிக்க வைத்தாராம். அவருக்கு ஆசையே மகளை ஒரு நல்ல மருத்துவர் ஆக்கவேண்டும் என்பது தானாம் . ஆனால் அதிதி ஷங்கர் நான் நடிகையாக வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறாராம் .
ஆனால் பல பேர் மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்ற நிலையில் அதிதி ஷங்கருக்கு அதனுடைய மதிப்பு தெரியாமல் நடிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வருவது இயக்குனர் ஷங்கருக்கு மிகப்பெரிய மனவுளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்…