கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனின் பஞ்சாயத்து தான் பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் டி இமான் கொடுத்த ஒரு பேட்டியால் சிவகார்த்திகேயனின் மானம் காற்றில் பறந்து வருகிறது. மேலும் டி இமான் கூறியது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை . இருந்தாலும் சிவகார்த்திகேயன் இது குறித்து வாய் திறந்தால் தான் என்னவென்று தெரியும் என்று கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை வெளியில் வராதவாறு தன்னுடைய ஐடி டீமை வைத்து மறைத்து வருகிறாராம் சிவகார்த்திகேயன் . மேலும் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு சில பேரின் தூண்டதலால்,
தனக்குத்தானே விளம்பரம் தேட ஆரம்பித்து விட்டார் . அதற்காக அவரிடம் ஒரு தனி படையே இருக்கிறதாம் . இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விக்ரமும் அதையே செய்ய ஆரம்பிக்க உள்ளாராம் . அந்த வகையில் இன்று விஜய் , அஜித்தை விட ,
அதிக செல்வாக்கில் இருந்திருக்க வேண்டியவர் நடிகர் விக்ரம் . இவரிடம் திறமை இருந்தும் அந்த அளவிற்கு மேலே வராததற்கு காரணம் அவர் மிகவும் எளிமையானவர். மேலும் அவர் யாரிடமும் போலித்தனமாக பழக மாட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா தனக்கு கொடுக்கும்,
மரியாதையை தெரிந்து கொண்ட விக்ரம் தற்போது சிவகார்த்திகேயனை போல செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் நல்லா இருந்த மனுஷனும் இப்படி மாறிவிட்டாரா.? என்று கூறி வருகின்றனர்…