சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஜாதியை எதிர்க்கிறேன் என்று பல இயக்குனர்கள் படம் எடுத்து வருகிறார்கள் . ஆனால் அவர்கள் எடுத்த படங்கள் ஜாதி வெறியை மேலும் தூண்டும் விதமாகத்தான் அமைகிறது . அப்படி சமீபத்தில் நாங்குநேரியில் பள்ளி மாணவ ர்களுக்கிடையே நடந்த ஜாதி சண்டை தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் .
அந்த அளவிற்கு இப்போது பல இடங்களில் இது போன்ற மோசமான சம்பவங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இதுகுறித்து பேசிய கனவே கலையாதே , மகிழ்ச்சி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கௌதமன் கூறியதாவது , தமிழ் சினிமாவில் இருக்கும் ,
இரண்டு இயக்குனர்கள் ஜாதி வன்மத்தை காட்டுவதால் தான் இது போன்ற பிரச்சனைகள் நடந்து வருகிறது . மேலும் ஜாதியை வைத்து படம் எடுத்து கோடி கணக்கில் சம்பாதித்து விடுகிறார்கள் . ஆனால் இதனால் இந்த சமுதாயம் தான் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக தமிழ் சினிமாவில் இருக்கும் அந்த இரண்டு இயக்குனர்கள் மட்டுமல்லாமல் ஜாதியை மையமாக வைத்து படம் எடுக்கும் அனைத்து இயக்குனர்களும் இனிமேல் திருந்த வேண்டும் என்று கூறியிருந்தார் இயக்குனர் கௌதமன் . இவர் கூறிய அந்த இரண்டு,
இயக்குனர்கள் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் என்று நன்றாகவே தெரிகிறது. அதுவும் சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் இந்த கலவரத்திற்கு விதையை போட்டு இருக்கலாம் என்று பலரும் கூறிவருகின்றனர் …