அஜித் குமார் தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் அஜித். இதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஆசை , காதல் கோட்டை போன்ற திரைப்படங்கள் ,
பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதன் பிறகு தான் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் அஜித். அதுவரை ஒரு சாப்ட்டான ஹீரோவாக நடித்து வந்த நடிகர் அஜித் அமர்க்களம் என்ற படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறினார் .
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை ஷாலினி. இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 2000 ஆண்டு இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் .
திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர். குறிப்பாக திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே நிறுத்திக் கொண்டார் நடிகை ஷாலினி . இதற்கும் அப்போது ஷாலினிக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வந்தது இருந்தாலும் அஜித சொன்ன வார்த்தைக்கு,
கட்டுப்பட்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார் நடிகை ஷாலினி. அப்படி காதலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் அஜித் -ஷாலினி அப்போதிலிருந்து இப்போது வரை ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…