தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய நடிகராக கலக்கி கொண்டு வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இவரைப் போன்று தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களும். இவர் தற்போது நடிகர் விஜய்யை வைத்து லியோ படத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ளார் .
அது மட்டுமல்லாமல் மற்ற மொழி நடிகர்கள் பலரும் இவரின் கால் சீட்டுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருமே தங்களுடைய கழுத்தில் கருங்காலி மாலையை போட்டு இருப்பார்கள் .
இது தான் இவர்களுடைய வெற்றியின் ரகசியம் என்று கூறப்படுகிறது . எதற்கு இவர்கள் இந்த மாலையை போட்டு இருக்கிறார்கள் என்று பலருக்கும் இது ஒரு கேள்வியாகவே இருந்து வந்தது. இப்படி இருக்கும் நிலையில் அந்த கருங்காலி மாலையின் மகிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது .
அந்த வகையில் கருங்காலி மரம் மற்ற மரங்களைப் போல இருக்காதாம் . அது மட்டுமல்லாமல் பாசிடிவ் எனர்ஜியை தனக்குள் ஈர்த்து வைக்கும் ஆற்றல் கொண்ட மரம் தான் இந்த கருங்காலி மரமாகும் . அப்படி இந்த மரத்திலிருந்து செய்யப்படும் மாலையை அணிவதால் நமக்கும்,
ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை கொடுக்குமாம். குறிப்பாக அடிக்கடி கோபப்படும் நபர்கள், கெட்ட சிந்தனை உள்ள நபர்கள் இந்த மாலையை அணிவித்தால் மாறிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …