கடந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயலான் . இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங் ,ஈஷா கோபிகர், கருணாகரன் ,யோகி பாபு, பானுப்பிரியா, பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் ,
இதுவரை 75 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . மேலும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் .
பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இதன் பிறகு இவர் இயக்கிய அயலான் திரைப்படம் தான் ,
பல வருடங்கள் கழித்து வெளியாகி இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் அயலான் படத்தின் வெற்றியால் ரவிக்குமாருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது . அந்த வகையில் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தை எடுக்க உள்ளாராம் ரவிக்குமார் .
தற்போது சூர்யா பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…