தமிழ் சினிமா உலகில் கடந்த பத்தாம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ,யோகி பாபு, மிர்னா மேனன் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் . அதோடு இவர்களுடன் இணைந்து சிவராஜ்குமார் ,மோகன்லால் ,
சுனில், தமன்னா போன்ற பிரபலங்கள் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு வெறித்தனமாக இசையமைத்திருந்தார் அனிருத். இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக இந்த திரைப்படம்,
தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் சக்கை போடு போட்டு வருகிறது . மேலும் இந்த திரைப்படம் இதற்கு முன்பு வசூலில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் , விக்ரம் , பாகுபலி போன்ற பல படங்களை ஓரங்கட்டியுள்ளது . அதுவும் பல வருடங்களாக ரஜினிக்கு எந்த திரைப்படங்களும் கை கொடுக்காத நிலையில்,
ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் 550 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அப்படி என்னதான் இந்த திரைப்படம் 600 கோடி வசூல் செய்தாலும் லாபம் இத்தனை கோடி தான் வந்ததாம் . அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் ,
வெளியாவதற்கு முன்பே 23 கோடி லாபத்தை பெற்று தந்ததாம் . அப்படி இந்த படம் வெளியான பிறகு கலாநிதி மாறனுக்கு 200 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஜெயிலர் திரைப்படம் தான் அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது …