நடிகர் விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விரைவில் அரசியலுக்கு வருவதாக சொல்லி தன்னுடைய கட்சியின் பெயரையும் அறிவித்திருந்தார். மேலும் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதால் இன்னும் இரண்டு படங்களில் நடித்த முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகுவதாகவும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நடிகர் விஜய். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்,
கோட் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் விஜய் . இதை அடுத்து விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது . அதைவிட விஜய்யின் கடைசி திரைப்படத்திற்கு இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் கொடுக்காத,
சம்பளத்தை கொடுக்கப் போகிறாராம் தயாரிப்பாளர் . அந்த வகையில் ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்த டி வி வி என்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம்தான் விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்க உள்ளதாம் . இந்த படத்திற்காக விஜய்க்கு 200 ல் இருந்து 250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்…