இன்று மீடியாவில் தலைப்பு செய்தியாக மாறிவிட்டார் நடிகர் விஜய் . அதற்கு முக்கிய காரணம் அவர் இன்று கட்சி ஆரம்பித்தது தான். அந்த வகையில் கடந்த வருடமே அரசியலுக்கு வருவதாக மேலோட்டமாக அறிவித்து இருந்த விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் அரசியலுக்கு பொழுதுபோக்குக்காக வரவில்லை என்பதை அடித்து சொல்லியிருக்கிறார் நடிகர் விஜய் .
இதனால் இவர் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகியிருப்பதால் அந்தப் படங்களை முடித்த கையோடு முழுநேர அரசியலில் களம் இறங்க உள்ளதாக கூறியிருந்தார் நடிகர் விஜய்.
இப்படி இருக்கும் நிலையில் விஜய் சினிமாவை விட்டு விலகுவதை பார்த்த இயக்குனர் வேணாம் விஜய் சார் என்று எச்சரித்திருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் பேரரசு தான் . அந்த வகையில் விஜய்க்கு திருப்பாச்சி, சிவகாசி என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை,
கொடுத்தவர்தான் இயக்குனர் பேரரசு . இவர் இந்த படம் மட்டுமல்லாமல் திருப்பதி, தர்மபுரி, பழனி ,திருவண்ணாமலை ,திருத்தணி போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் விஜய் சினிமாவை விட்டு விலகுவதுவாக அறிவித்திருந்ததை,
பார்த்த பேரரசு வேண்டாம் விஜய் சார், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்பட பணியில் தான் இருந்தார் என்று கூறியிருக்கிறார்…