தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என்று ஒரு தனி செல்வாக்கு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இவர் நிஜ வாழ்க்கையிலும் நடிக்க தெரியாதவர் . இதனாலேயே கேப்டன் விஜயகாந்த் என்றால் ரசிகர்கள் உயிராக இருந்து வந்தனர். மேலும் நல்லது செய்பவர்களுக்கு காலமில்லை என்று சொல்வது போல விஜயகாந்தின் உடல்நிலை,
மோசமாகி வீட்டிலேயே பல வருடங்களாக இருந்து வந்தார் . மேலும் அவர் ரசிகர்களை ஒரு தடவையாவது பார்க்க வர மாட்டாரா என்று தினம் தினம் ரசிகர்கள் ஏங்கினார்கள் . இப்படி இருக்கும் நிலையில் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
பூரண நலமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது . இதன் பிறகு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் .
மேலும் அவருடைய உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் . அப்போது அவருடைய ரசிகர்கள் எல்லாம் ஆம்புலன்ஸ் பின்னாடியே ஓடி வந்துள்ளனர் . மேலும் விஜயகாந்தின் முகத்தை பார்த்ததும் ரசிகர்கள் கதறி கதறி அழுதுள்ளனர் .
தற்போது அந்த வீடியோ பலரையும் கலங்க வைத்து வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க ….