அறந்தாங்கி நிஷா ஓர் பிரபலமான விஜய் டிவி பிரபலம் மற்றும் நடிகை ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் அறந்தாங்கி நிஷா. குறிப்பாக ஒரு பெண் காமெடி நடிகையாக மாறுவது சாதாரண விஷயம் கிடையாது.
அதை அசால்டாக செய்து காட்டினார் அறந்தாங்கி நிஷா .இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் தமிழில் வெளியான மாரி 2 ,கோலமாவு கோகிலா, சீமராஜா, கலகலப்பு 2 ,திருச்சிற்றம்பலம் ,அநீதி, ஜெயிலர் போன்ற பல திரைப்படங்களில்,
நடித்திருந்தார் அறந்தாங்கி நிஷா. இதனிடையே திருமணமான அறந்தாங்கி நிஷாவுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது . மேலும் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த,
உதவிகளை சென்னை மக்களுக்கு செய்து வருகின்றனர் . அந்த வகையில் அறந்தாங்கி நிஷாவும் சென்னைக்கு கிளம்பி வந்து தன்னால் முடிந்த உதவியை செய்திருந்தார் . ஆனால் அவர் உதவி செய்ததை விட அவருடைய மகள் ஐ சி யு வில் இருக்கும் போது ,
மனசு கேட்காமல் அறந்தாங்கி நிஷா சென்னைக்கு கிளம்பி வந்ததை தான் பலரும் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…