தமிழ் சினிமா உலகில் கடந்த வாரம் முழுவதும் திரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. எப்போதும் விளையாட்டாக பேசி சர்ச்சையை கிளப்பும் மன்சூர் அலிகான் இந்த முறை திரிஷாவை பற்றி மிகவும் கொச்சையாக பேசி இருந்தார். இதனால் அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று பலரும் கொந்தளித்தனர் . அது மட்டுமல்லாமல் திரிஷாவுக்கு ஆதரவாக ,
குஷ்பூ, சிரஞ்சீவி போன்ற பல பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் செய்தது தப்புதான் என்று திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் நடிகர் மன்சூர் அலிகான் .
இதற்கு த்ரிஷாவும் மன்னித்து விட்டதாக பதிவு ஒன்றை போட்டு இருந்தார் . இப்படி இந்த பிரச்சனையெல்லாம் ஓய்ந்த நிலையில் அடுத்த பஞ்சாயத்தை தொடங்கி விட்டார் நடிகர் மன்சூர் அலிகான் . அந்த வகையில் குஷ்பூ ,திரிஷா, சிரஞ்சீவி போன்றவர்கள் மீது,
மான நஷ்ட வழக்கு போட உள்ளாராம் நடிகர் மன்சூர் அலிகான் . மேலும் நவம்பர் பதினோராம் தேதி பேசிய வீடியோவை நவம்பர் 10ஆம் தேதி எடிட் செய்து வெளியிட்டு மன்சூர் அலி கானை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளனர். அதனால் ஒரு சில ஆதாரங்களுடன் திரிஷா,
குஷ்பூ , சிரஞ்சீவி மீது வழக்கு தொடுக்க உள்ளதாக மன்சூர் அலிகான் கூறியுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் இது எங்க போய் முடியுமோ தெரியல என்று கூறி வருகின்றனர்…