அருண் விஜய் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மூத்த நடிகரான விஜயகுமாரின் மகனான அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பிரியம், கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம், அன்புடன் ,ஜனனம் ,போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவருக்கு பெரியளவில் வரவேற்பு ,
கிடைக்கவில்லை . இதன் பிறகு பல வருடம் சினிமாவை விட்டு விலகி இருந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இந்த திரைப்படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ,
ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகர் அருண் விஜய் . இதன் பிறகு இவர் நடித்த குற்றம் 23 ,செக்க சிவந்த வானம் ,தடம் ,யானை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வணங்கான் , பார்டர் என்று மூன்று படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்,
நடிகர் அருண் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய 45 வது பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் நடிகர் அருண் விஜய் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…