தமிழ் திரையரங்கில் இருக்கும் பல இசையமைப்பாளர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் . என்னதான் இவர் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்தாலும் தன்னுடைய ஆணவத்தால் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். அது மட்டுமல்லாமல் இவர் முன்னணி இயக்குனர்கள் உட்பட பல இயக்குனர்களையும் பகைத்துக் கொண்டார்,
என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவுடன் சண்டை , அதனால் அவரிடம் போய் என்னால் நிற்க முடியாது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் பிரபல இயக்குனர் ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் மிஷ்கின் தான்.
அந்த வகையில் தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் இயக்குனர் மிஷ்கின் . அப்படி இயக்குனர் மிஷ்கின் இயக்கிய நந்தலாலா ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , சைக்கோ போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார் இளையராஜா.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின், இளையராஜாவுடன் நான் சண்டை போட்டு விட்டேன். அதனால் இனி அவரிடம் இசையமைக்க சொல்லி நிற்க மாட்டேன் என்று கூறியிருந்தார் இயக்குனர் மிஷ்கின் . ஆனால் என்ன சண்டை,
என்று தெரியவில்லை . இதனால் தான் தன்னுடைய அடுத்த படமான பிசாசு 2 படத்திற்கு அவருடைய மூத்த மகனான கார்த்திக் ராஜாவை இசையமைக்க வைத்திருக்கிறாராம் இயக்குனர் மிஷ்கின் …