தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் மார்க்கெட்டை அவர்களுடைய படங்களின் வசூல் தான் தீர்வு செய்கிறது. இதற்காகவே சமீப காலமாக பொய்யான வசூலை அறிவித்து வருகிறார்கள் ஒரு சில முன்னணி நடிகர்கள். அந்த வகையில் விஜய்யின் வாரிசு படம் 350 கோடி வசூல் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 650 கோடி வசூல் என்றும் கூறிய போது யாருமே நம்பவில்லை.
காரணமே ரசிகர்களுக்கு தெரிந்து விடுகிறது உண்மையான வசூல் விபரங்கள் . அப்படி இருந்தும் முன்னணி நடிகர்களுக்காக ஓடாத படத்தை கூட வசூல் ரீதியான வெற்றிப்படமாக மாற்றி விடுகின்றனர் தயாரிப்பாளர்கள் . இப்படி இருக்கும் நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்,
வகையில் தயாரிப்பாளர் சங்கம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் உண்மையான வசூலை கணக்கெடுக்கும் கலெக்ஷன் ட்ராக்கிங் சிஸ்டம் சாப்ட்வேர் வைக்க வேண்டும் என்று அதிரடி முடிவு எடுத்துள்ளார்களாம்.
இதை ஒவ்வொரு தியேட்டர்களிலும் கொண்டு வந்தால் உண்மையான வசூல் விபரத்தை மட்டுமே வெளியிட முடியுமாம் 400 கோடி 600 கோடி என்று ஏமாத்த முடியாதாம் . இந்த புதிய தொழில்நுட்பம் நல்ல விஷயமாக இருந்தாலும் ரஜினி, கமல் ,விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு ,
ஆப்பு வைக்கும் சம்பவமாகவே அமைந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் பொருத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது…