பிரியாமணி ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியாமணி . இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தான் .
இந்த படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகை பிரியாமணி. பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை ,தோட்டா ,நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா போன்ற பல திரைப்படங்களில்,
நடித்திருந்தார். மேலும் நடிகை பிரியாமணி தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான பிறகும் நடித்து வரும்,
பிரியாமணி சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் . இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் முத்தழகா இது .? கல்யாணமான பிறகு ஆளே மாறி விட்டாரே என்று கூறி வருகின்றனர்…