தமிழ் சினிமா உலகில் ஓர் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே இமயமலைக்கு புனித பயணத்திற்கு சென்றார் சூப்பர் ஸ்டார் . குறிப்பாக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து தன்னுடைய மன நிம்மதிக்காக ,
இமயமலைக்கு சென்று இருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் இமயமலையில் இருந்து வீடு திரும்பிய ரஜினி உத்திரப் பிரதேசம் வந்ததும் அந்த மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்தியநாத்தை நேரில் சந்தித்திருந்தார் சூப்பர் ஸ்டார் . அப்படி சந்தித்தது மட்டுமில்லாமல் அவருடைய காலில் விழுந்தும் ,
ஆசீர்வாதம் வாங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இதற்கும் யோகி ஆதித்தியநாத் ரஜினியை விட வயதில் சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் தன்னைவிட இளையவரின் காலில் ரஜினி எதற்கு விழுந்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர் . அதற்கான காரணம் தற்போது ,
வெளியாகி உள்ளது. அந்த வகையில் யோகி ஆதித்தியநாத் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் மட்டுமல்லாமல் நாத சைவ சம்பிரதாயத்தை பின்பற்றும் மடத்தின் பீடாதிபதியும் ஆவார் . இதனால் அவரை பார்த்தால் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பது தர்மமாக கருதப்படுகிறது .
அதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யோகி ஆதித்தியநாத்தின் காலில் விழுந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது ..