சமீப காலமாக நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவதற்காக பல வேலைகளை செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இதனால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்காக இப்போதே தன்னுடைய ரசிகர்களையும் தயார் செய்து வருகிறார் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களின் ஓட்டை வாங்குவதற்காக,
தன்னுடைய ரசிகர்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பை வைத்துள்ளாராம் நடிகர் விஜய் . அது என்னவென்றால் , ஆரம்ப காலகட்டங்கள் முதல் தற்போது வரை விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது வழக்கமான ஒன்றுதான் . ஆனால் ரசிகர்கள் தான் சண்டைப்போட்டு கொள்கின்றனர் .
விஜய்யும் அஜித்தும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் . இருந்தாலும் இந்த நேரத்தில் அஜித்தை பற்றி ஏதாவது தவறாக தன்னுடைய ரசிகர்கள் பேசினால் தனக்கு ஆபத்தாக வந்து விடும் என்று முன்கூட்டியே சிந்தித்த விஜய் , தன்னுடைய ரசிகர்களிடம் யாரும் இனிமேல் அஜித்தை பற்றி தவறாக பேசக்கூடாது,
என்று கட்டளை இட்டு உள்ளாராம். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் முதல் போஸ்டர் அடிப்பது வரை எதிலும் அஜித்தை பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட போடக்கூடாது என்றும் அதிரடியாக கூறிவிட்டாராம் . இதனால் அஜித் ரசிகர்களிடமும் எப்போதும் போல,
நண்பர்களாகவே இருங்கள் , அவர்களையும் கொண்டாடுங்கள் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோளை வைத்துள்ளாராம் நடிகர் விஜய் . இதைப் பார்த்த ரசிகர்கள் இப்பவே நடிகர் விஜய் முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார் போல என்று கூறி வருகின்றனர்…