சிவகார்த்திகேயன் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமான சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதன் பிறகு வெளியான எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது . இதன் பிறகு தான்,
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் சிவகார்த்திகேயன் . மேலும் சிவகார்த்திகேயனின் படங்கள் கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படங்களாக தான் இருக்கும். இதனாலேயே இவரின் ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்து விடுகிறது.
அப்படி அடுத்ததாக மாவீரன் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக செல்லும் இடம் எல்லாம் தலையில் குல்லா அணிந்து கொண்டு தான் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.இன்னும் சொல்லப் போனால்,
மாவீரன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு கூட குல்லா அணிந்துதான் வந்தார் சிவகார்த்திகேயன். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது , அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்திற்காக புதிய கெட்டப் ஒன்றை ,
போட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். ஆனால் அதை வெளியில் காட்டக்கூடாது என்று படக்குழுவினர் சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்டு உள்ளார்களாம் . இதனால் தான் எவ்வளவு வெயில் அடித்தாலும் இதை மாட்டிக் கொண்டு சுத்த வேண்டியிருக்கு என்று கூறியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்…