தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல முன்னணி நடிகர்களுக்கு ஒரு முன்னு தாரணமாக இருந்து வருபவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். இவர் நடிப்பிற்கே ஒரு இலக்கணமாக இருந்தவர் என்று கூட சொல்லலாம் . இப்படி பிரபலமான நடிகராக கலக்கிக் கொண்டு வந்த சிவாஜி கணேசனின் கடைசி ஆசையை ரஜினி நிறைவேற்றியதாக ,
ஒரு பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார் . அந்த வகையில் ரஜினியும், சிவாஜியும் இணைந்து பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர் . அப்படி கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து படையப்பா படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் . அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எல்லோருக்கும் ,
முன்னாடியே படப்பிடிப்பிற்கு வந்து விடுவாராம் சிவாஜி. அப்போது ரஜினியிடம் தான் அதிக நேரம் பேசுவாராம் . அப்படி ஒரு முறை இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி , நான் இறந்துவிட்டால் என்னுடைய உடலுடன் நீ வருவாயா என்று ரஜினியிடம் கேட்டு இருக்கிறார் சிவாஜி.
இதை கேட்ட ரஜினி அதிர்ச்சியாகி ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேட்டிருக்கிறார் . அதற்கு சிவாஜி வயசாகி கொண்டே போகிறது, நீயும் ஊரிலேயே இருக்க மாட்டேங்குற, அதனால் தான் இப்படி கேட்டேன் என்று கூறியிருக்கிறார் . அதற்கு ரஜினி நான் கண்டிப்பாக வருவேன் ,
என்று சொல்லி இருக்கிறார் . அப்படி சொன்னது போலவே சிவாஜி இறந்த போது அடக்கம் செய்யும் வரை கூடவே இருந்தாராம் ரஜினி. ஆனால் ரஜினி அவருடைய அப்பாவுக்கு கூட இதை செய்தது கிடையாதாம்,ஆனால் சிவாஜியின் ஒரு வார்த்தைக்காக செய்ததாக கூறியிருந்தார்…