தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சாய்பல்லவி . ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது . பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 என்ற படத்தின் மூலம்,
தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து என் ஜி கே ,பாவ கதைகள், கார்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி . மேலும் நடிகை சாய் பல்லவிக்கு உடன் பிறந்த தங்கை ஒருவர் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அவருடைய பெயர் பூஜா கண்ணன். இவரும் தமிழில் வெளியான சித்திரை செவ்வானம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் 31 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சாய்பல்லவியின் தங்கைக்கு நேற்று கோலாகலமாக,
நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது . மேலும் அக்காவுக்கு முன்பே தங்கைக்கு நடந்து விட்டதே என்றெல்லாம் யோசிக்காமல் தங்கையின் நிச்சயதார்த்தத்தில் குத்தாட்டம் போட்டிருந்தார் நடிகை சாய் பல்லவி . இதோ அந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…