கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் சென்னையில் மிகப் பெரிய சேதாரம் ஏற்பட்டுள்ளது . மேலும் இந்த வெள்ளத்தால் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது . இதனால் சென்னை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நேரத்தில் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களால் முடிந்த நிவாரணத் தொகையை தமிழக அரசுக்கு கொடுத்திருந்தார்கள் .
அப்படி சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், கலாநிதி மாறன் ,விஷ்ணு விஷால் ,சூரி போன்ற பிரபலங்களை தொடர்ந்து வைகைப்புயல் வடிவேலுவும் நிதியுதவி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் உதவி செய்யவே யோசிக்கும் வடிவேலு சென்னை மக்களுக்காக ,
6 லட்சம் நிதியுதவி கொடுத்திருக்கிறார் . இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியா மனசு வந்து கொடுத்துட்டார் போல என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க …
மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு – நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று… pic.twitter.com/yDYv9GvrZL
— Udhay (@Udhaystalin) December 15, 2023