தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர்தான் நடிகர் விஜய் . மேலும் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராகவும் கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . இதை யடுத்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள,
தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் . என்னதான் இவர் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டாலும் விஜய் அவருடைய பெற்றோர்களை கண்டு கொள்வதில்லை என்ற பேச்சு சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வருகிறது .
அதுவும் சமீப காலமாக விஜய் அரசியலில் களமிறங்குவதற்காக தீயாய் வேலை செய்து வருகிறார். அப்படி இருக்கும் போது ஒரு சிலர் வீட்டையே ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியவில்லை , இதில் எங்க இவர் தமிழ் நாட்டை காப்பாற்ற போகிறார் என்று கூறி வந்தனர்.
இப்படி இருக்கும் நிலையில் ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஜய் . அந்த வகையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டி கொடுத்திருந்த விஜய்யின் அம்மாவான ஷோபா விஜய்காக ஒரு சட்டையை எடுத்திருந்தார்.
தற்போது அந்த சட்டையை தான் நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்கும் போது அணிந்து கொண்டு வந்திருக்கிறார் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இவரை போய் தப்பா நினைச்சுட்டோமே என்று கூறி வருகின்றனர்…