கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவையே கலக்கிக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அப்படி அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய சூப்பர் ஸ்டார் 72 வயதாகியும் கூட இன்னும் அதே அந்தஸ்தில் கலக்கிக் கொண்டு வருகிறார் . மேலும் அண்மைக்காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து பெரிய அளவில் ,
ஓடிக் கொண்டு இருந்தது . இதில் அடிக்கடி நடிகர் விஜய்யின் பெயர் தான் அடிபட்டது . இதற்காக ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடலில் பேர தூக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க நூறு பேரு போன்ற வரிகளை வைத்திருந்தார்கள் . ஆனால் விஜய் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான் ,
என்று லியோ வெற்றி விழாவில் கூறிவிட்டார் . இப்படி தன்னுடைய பட்டத்தை யாரும் பறிக்கக்கூடாது என்று உஷாராக இருக்கும் ரஜினி தற்போது வேறு நடிகரின் பட்டத்தை எஸ்.ஜே சூர்யாவுக்கு கொடுத்திருக்கிறார் . அந்த வகையில் கடந்த தீபாவளிக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்,
இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . இதனால் இந்த படத்தின் படக்குழுவினர்களை நேரில் சந்தித்து பாராட்டி இருந்தார் ரஜினிகாந்த் .
அப்படி எஸ் ஜே சூர்யாவை ” இந்நாளின் நடிகவேள் ” என்று நடிகர் எம் ஆர் ராதாவின் பட்டத்தை கொடுத்திருந்தார் ரஜினி . இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ஒரு நியாயம் , ஊருக்கு ஒரு நியாயமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…