தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு காட்சியில் ஸ்கூட்டி ஓட்டுவதற்கே பயந்து நடுங்குகிறார்கள் இப்போது இருக்கும் நடிகைகள் . இன்னும் சொல்லப்போனால் அதற்கு கூட ஒரு சில நடிகைகள் டூப் வைத்து நடிக்கின்றனர் . ஆனால் அந்த காலத்திலேயே நடிகர்களுக்கு இணையாக புல்லட் ஓட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் ஒரு நடிகை . அவர் வேறு யாரும் இல்லை நடிகை கே ஆர் விஜயா தான்.
கடந்த 1963ஆம் ஆண்டு வெளியான கற்பகம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை கே ஆர் விஜயா. பின்னர் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வந்த நடிகை கே ஆர் விஜயா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே எம்ஜிஆர் ,சிவாஜி, ஜெமினி கணேசன்,
போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வயதாகி விட்டதால் ,
அவ்வபோது சீரியல் மற்றும் படங்களில் தலைகாட்டி வருகிறார் நடிகை கே ஆர் விஜயா . குறிப்பாக இவர் இதுவரை 325 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் இவர் கதாநாயகியாக கலக்கிக்கொண்டிருக்கும் போது,
புல்லட் ஒட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…