தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆரம்ப காலகட்டங்களில் தூக்கிவிட்டு அழகு பார்த்திருக்கிறார். அந்த வகையில் விஜய், சூர்யா , வடிவேலு போன்ற பல நடிகர்களை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் சரத்குமார் . ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சரத்குமாருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் ,
புலன் விசாரணை படத்தில் சரத்குமாருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் ,புதுப்பாடகன், தாய்மொழி போன்ற படங்களிலும் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர் .
குறிப்பாக தனக்கு வந்த ஒரு சில பட வாய்ப்புகளை சரத்குமாருக்கு கொடுத்திருக்கிறாராம் விஜயகாந்த். அப்படி பார்த்து பார்த்து சரத்குமாரை தூக்கிவிட்டு இருந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இந்நிலையில் விஜயகாந்த் இறந்தபோது அபுதாபியில் இருந்த சரத்குமார்,
தமிழ்நாடு திரும்பியதும் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியது மட்டுமல்லாமல் , விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லியிருந்தார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…