பார்வதி ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார். மலையாள படத்தில் மூலம் தமிழ் திரைப்பயணத்தை தொடங்கிய பார்வதி கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், மரியான் ,உத்தம வில்லன்,
பெங்களூரு நாட்கள் , சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் நடித்திருக்கிறார் நடிகை பார்வதி. மேலும் இவர்,
தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பார்வதி, சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்குமே எதுவுமே கொடுப்பதே கிடையாது.
அந்த பட்டத்தால் இதுவரை யாராவது பயனடைந்துள்ளார்களா .? இந்தப் பட்டத்தால் யாருக்குமே எந்த பிரயோஜனமும் கிடையாது. மேலும் சூப்பர் ஸ்டார் என்று சொல்வதை விட சூப்பர் நடிகர் என்று சொல்வதை தான் நான் விரும்புகிறேன் . அந்தப் பட்டத்தை பகத் பாசில் ,
போன்ற பல நடிகர்களுக்கு கொடுக்கலாம் என்று கூறியிருந்தார் நடிகை பார்வதி . இதுதான் தற்போது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…