தமிழ் சினிமாவை பொருத்தவரை மற்ற நடிகர்களை விட சூர்யா எப்போதும் தனித்து நிற்பவர் என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் இவர் நடிப்பதை தாண்டி அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருகிறார் நடிகர் சூர்யா.
இதனாலேயே ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சூர்யாவின் ரசிகர் ஒருவர் சாலை விபத்தில் இறந்துவிட்டாராம் . இதுவே மற்ற நடிகர்களாக இருந்தால் வெறும் இரங்கல் மட்டும் தெரிவித்து விட்டு இருப்பார்கள்.
ஆனால் நடிகர் சூர்யா அப்படி இல்லாமல் அவருடைய வீட்டிற்கே நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அப்படி ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் , அவருடைய பெற்றோர்களிடம் எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள், நான் இருக்கிறேன் உதவி செய்ய என்று,
வாக்கு கொடுத்து இருக்கிறாராம் . தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகரா என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்கள் பாருங்க…